Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி பள்ளிக் குழந்தைகள ஆடல், பாடல்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கும்பகோணத்தில் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் அன்று ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரு போன்று வேடமணிந்து அணிவகுத்து நின்று நேருவின் பெருமைகளை மழலை மொழியில் எடுத்துரைத்தனர்.
மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். மாணவர்கள் பாரம்பரிய கலாச்சார பறையிசையை இசைத்து சக மாணவர்களை அசத்தினர்